Sunday, January 8, 2012

பிதற்றல்கள்



பேருந்தில் நீ சாய்ந்தபடி
கண் அயர்ந்த அழகை வெளியிலிருந்து
ரசித்துக் கொண்டே உன் வீடு வரை
பின் தொடர்ந்த அந்த இரண்டு மணி
நேரத்திற்குள் எப்படியோ வந்துவிட்டது
இரு ஜென்மங்கள் பழகிய அன்யோன்யம்.!

-----

ஒரு வார்த்தை பேசியதில்லை.
ஒரு குடை கீழ் இருவரும்
ஈர நடை நடந்ததில்லை...
அருகருகே அமர்ந்து உன்
உச்சி நுகர்ந்ததில்லை...
தி-நகரில் மணிக்கணக்கில் நீ டாப்ஸ் தேட
செல்ல எரிச்சலோடு நான் பை தூக்கியதில்லை...
அரை மணி நேரம் தொடர்ந்து மூச்சிரைக்க
நீ பேசுவது என்னவென்ற கவலையின்றி
உன் கோழி முட்டை விழிகளின் நடனத்தை
ரசித்த அனுபவமும் இல்லை...
எல்லாம் இருந்தும் நீ இல்லாத என்னை
நினைக்கும் போது
உயிர் மௌன ஓலமிடுகிறது
அடி வயிறு ஏதோ செய்கிறது.

No comments:

Post a Comment